‘பாக்கியலட்சுமி’ சீரியலிலிருந்து விலகும் முக்கிய நபர்… இவரா?… வைரலாகும் தகவல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஒருவர் தற்பொழுது சீரியலை விட்டு வெளியேற இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் முக்கியமாக இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது  என்று கூறலாம் .கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண் எப்படி தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு சாதித்து வருகிறார் என்பதை பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தின் மூலம் அழகான முறையில் எடுத்துரைத்துள்ளார் இந்த சீரியலின் இயக்குனர்.

   

இந்த சீரியலில் தற்போது பாக்கியா பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் பாக்கியாவின் மகனான எழில் தற்பொழுது அவரது காதல் கல்யாணம் பிரச்சினையை பார்ப்பாரா? அல்லது வீடு வாங்கும் பிரச்சினை கவனிப்பாரா என்று சீரியல் தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இருந்து முக்கியமான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரேஷ்மா தொடரை விட்டு விலகப் போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் வெயிட்டான வில்லி கதாபாத்திரம் கிடைத்திருப்பதால் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே இவர் நடித்து வரும் பாக்கியலட்சுமி தொடரில் இவரது கதாபாத்திரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதும்  குறிப்பிடத்தக்கது.