மனைவியின் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய ரவீந்தர்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ…

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி.

   

இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது.

அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார்.

மறுபக்கம் மகாலட்சுமி சீரியலில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார். அது மட்டுமல்லாமல் பல விளம்பரங்களையும் செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

திருமணம் முடிந்த கையோடு இவர்களின் திருமணம் விமர்சிக்கப்பட்டாலும் தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

அதேசமயம் விடுமுறை நாட்களில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதி தங்களின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அவ்வகையில் சமீபத்தில் தாங்கள் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் மகாலட்சுமி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அதனை ரவிந்தர் மிகப் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.