‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்… அடடே இவரா?… கண்ணீர் விட்டு அழுத நடுவர்கள்… வைரலாகும் ப்ரோமோ இதோ…

விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஹிட்டாக ஒளிபரப்பாகும்  ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் இன்று பிரபலங்களாக திரையுலகில் வலம் கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று, தற்போது 8 சீசன்களை கடந்து 9வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

   

இந்நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் பணிபுரிந்து வருகின்றனர். பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு, தற்போது தங்களை திறமையை நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களாக பார்க்கப்படுபவர்கள் சினேகா மற்றும் பிரியா என்ற இரட்டை சகோதரிகள். இவர்களில் சினேகா இந்த வாரம்  நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார். நல்ல பாடகி என நடுவர்கள் மத்தியில் பெயர் பெற்ற சினேகா தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறி இருப்பது நடுவர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்நிலையில் தனது சகோதரி சினேகா குறித்த பிரியா பேசுவதை கண்ட நடுவர் அனுராதா ஸ்ரீராம் கண் கலங்கி அழுதுள்ளார். தற்பொழுது இந்த பிரமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ….