சிறுவன் ஒருவன் படிப்பை மூளையில் ஏறு ஏறு என்று கூறும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றைய குழந்தைகள் அனைவரும் புத்திசாலியாக இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை கூறினால் அதை எளிதில் புரிந்து கொள்கிறார்கள்.
அதிலும் படிக்க சொல்லிவிட்டால் போதும் அவர்களுக்கு கோபம் எங்கிருந்துதான் வருமோ என்று தெரியவில்லை. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் ஒரு சிறுவனிடம் அம்மா படிப்பது மண்டையில் ஏறுகிறதா? என்று கேட்க உடனே அந்த சிறுவன் மண்டையில் ஏறு இந்த லெட்டர் எல்லாம் என் மண்டையில் ஏற வேண்டும். ஏறு ஏறு என சொல்லிக் கொள்கிறான். இவனின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு அனைவரிடத்திலும் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram