திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பத்தை அறிவித்த பிரபல நடிகை… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

மலையாள நடிகை பூர்ணா துபாயை சேர்ந்த தொழிலதிபரை, கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார்.

மலையாள நடிகையான பூர்ணா தமிழில் 2008ல் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் பரத் நடித்திருந்தார் .இத்திரைப்படம் ரிலீஸாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து ஆடுபுலி, கந்தகோட்டை, தகராறு, காப்பான் தலைவி என பட படங்களில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா.

   

இவர் தமிழில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவருக்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆசிப் அலி என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் அக்டோபர் மாதம் திருமணம் நடந்து முடிந்தது.

அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்பொழுது திருமணமாகி இரண்டே மாதங்களில் நடிகை பூர்ணா தான்  கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் வீடியோ மூலம் அறிவித்துள்ளார். இந்த வீடியோவில் அவர் தான் தாயாகப் போவதாகவும், தன்னுடைய பெற்றோர் தாத்தா பாட்டியாகப் போவதாகவும், தன்னுடைய மொத்த குடும்பத்துடன் இணைந்து கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடியுள்ளனர்.

இந்த வீடியோ தற்பொழுது படு வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பூர்ணா மற்றும் அவருடைய கணவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த வைரல் வீடியோ….