வெற்றி கோப்பையுடன் அம்மாவை அள்ளி அணைக்கும் தனுஷின் மகன்கள்…. மகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்களில் நடித்து வருகிறார்.

   

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இருந்தாலும் தங்களின் இரண்டு பிள்ளைகளுக்காக விவாகரத்து செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கத்திலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஜிம் ஒர்க் அவுட் வீடியோ புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

அவர் பத்து வருடங்களாக தான் தொடர்ந்து வரும் புத்தகம் படிப்பதை இன்னும் நிறுத்தவில்லை என்று ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார்.

அது மட்டுமல்லாமல் மாடர்ன் ஆடை மற்றும் சைக்கிளிங் என்று ரசிகர்களை அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தனுஷை பிரிந்ததும் அப்படியே ஆளு மாறிட்டீங்க என கருத்துக்களை கூறி வருகின்றனர். இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஐஸ்வர்யா தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா இருவரது பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தின ஓட்ட பந்தயப் போட்டியில் இருவரும் ஓடிய புகைப்படங்களையும் வெற்றி கோப்பையுடன் அண்ணன் மற்றும் தம்பி இருவரும் சந்தோஷமாக சிரிக்கும் காட்சிகளையும் புகைப்படங்களாக எடுத்து ஐஸ்வர்யா ரஜினி பகிர்ந்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.