62 வயதில் தொழிலதிபரை மூன்றாவது திருமணம் செய்த ‘வாரிசு’ பட நடிகை… அட இவரா?… ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஜெயசுதா. 1972ல் தனது இளம் வயதிலிருந்து நடிக்க தொடங்கியவர் நடிகை ஜெயசுதா. இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் இமயம் பாலச்சந்தர்.

   

நடிகை ஜெயசுதா அறிமுகமான தமிழ் படம் அரங்கேற்றம் இதைத்தொடர்ந்து இவர் சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவன் இல்லை, அபூர்வராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பின்னர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிகை ஷாலினி அம்மாவாக நடித்திருந்தார் ஜெயசுதா. இதைத்தொடர்ந்தவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

தமிழில் மட்டுமின்றி  தெலுங்கு சினிமாவில் பல படங்களில் அம்மா ரோலில் தற்பொழுது நடித்து வருகிறார் ஜெயசுதா. இவர் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார்.

நடிகை ஜெயசுதாவின் குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது இவர் தயாரிப்பாளர் நித்தின் கபூரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது இரண்டாவது கணவர் நித்தின் கபூர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.

தற்பொழுது மூன்றாவது முறையாக ஒரு தொழில்அதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது.

ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார். அனால் தற்பொழுது அதே செய்தி மீண்டும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.