பழங்கால பொருட்களை கொண்டு தனது வீட்டை அழகு படுத்தியுள்ள ‘எதிர்நீச்சல்’ சீரியல் ஜான்சி ராணி… எவ்வளவு அழகா இருக்கு?… இதோ பாருங்க…

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ‘எதிர்நீச்சல்’.  இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று டி ஆர் பி யில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. குடும்பத்து பெண்களை ஆணாதிக்கம் செய்யும் ஆண்களை அடக்கும் பெண்களாக இந்த சீரியலில் உள்ள பெண்கள் கலக்கி வருகின்றனர். இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

   

இந்த சீரியலில் தற்பொழுது மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்தியபிரியா, பாம்பே ஞானம், காயத்ரி கிருஷ்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் கரிகாலனின் அம்மாவாக ஜான்சி ராணி  கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன்.

இவர் தற்பொழுது பிரபல சேனல் ஒன்றுக்கு தனது வீட்டை ஹோம் டூர் செய்து நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அப்பொழுது அவர் தனது வீட்டில் உள்ள பழங்கால பொருட்கள் குறித்தும் கூறியுள்ளார். ஒவ்வொரு முறை வெளியே செல்லும் பொழுதும் தனது மனதுக்கு பிடித்த இந்த பொருட்களை வாங்கியதாக குறிப்பிட்ட அவர், இதற்குப் பின்னால் வேறு எந்த காரணங்களும் இல்லை என்று தெரிவித்தார்.

சமூக நலத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் காயத்ரி கிருஷ்ணன். இவர் திருநங்கைகளின் நலனுக்காக இயங்கி வருகிறார். தனக்கு புத்தர் சிலைகள் பிடிக்கும் எனக் கூறியுள்ளார் காயத்ரி அவருடைய பொன்மொழிகளும் பிடிக்கும் .

புத்தரின் சிலை தன்னுடைய மனதுக்கு மனமகிழ்ச்சியை தருவதாக கூறி கூறிய அவர் கொரோனா காலகட்டத்தில் தனது தோழியுடன் இந்த வீட்டில் தங்கி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இவரின் இந்த நேர்காணல் படுவைரலாகி வருகிறது.