திருமணம் முடிந்த 5 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

இந்தியாவில் திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை கடும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவில் திருமணமாகி 5 நாட்களில் இளம்பெண் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

   

தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு தண்டூர் எனும் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று (மே 14) திருமணம் நடைபெற்றது.

குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டதால் மிகவும் சந்தோஷத்துடன் அன்றைய தினம் இரவு அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இரவு உணவை சாப்பிட்டனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அங்குள்ள கோவில் ஒன்றுக்கு சென்று அபிஷேகம் செய்துவிட்ட புதுமண ஜோடி இருவரும் வீடு திரும்பியிருக்கின்றனர்.

தொடர்ந்து ஸ்ரீவானிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது, அடிக்கடி வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறியதும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

அவரது மரணத்திற்கு கொரோனா காரணமாக இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் கூறினாலும், திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்ததாக உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதற்கிடையே தங்களின் மகள் தூக்கமின்மை காரணமாக ரத்தக்கொதிப்பில் உயிரிழந்ததாக அவருடைய பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.