ஓ இப்படித்தான் யானைக்கு சாப்பாடு கொடுப்பாங்களா…. பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு…. வைரலாகும் வீடியோ….!!!

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் யானைகளுக்கு அங்கிருக்கும் ஊழியர்கள் உணவு தயாரிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. யானை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது, சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் யானைகள் என்றால் பிடிக்கும்.

   

கோவில்களுக்கு முன்பு நிற்கும் யானைகளுக்கு காசு கொடுத்து அதன் இடம் ஆசிர்வாதம் வாங்குவது, அதன்மேல் அமர்ந்து சவாரி செய்வது என்பது இன்றளவும் இருக்கின்றது. பெரும்பாலும் காப்பகத்தில் இருக்கும் யானைகள் வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து போன்றவை சரியான நேரத்தில் உரிய மருத்துவ ஆலோசனைப்படி வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கு காலை நேர உணவு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு யானைக்கும் வரையறுக்கப்பட்ட உணவு தயார் செய்யப்படுகின்றது. கால்நடை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ராகி, வெல்லம், சாதம், சிறிது உப்பு கலந்து உருண்டையாக உருட்டி யானைகளுக்கு ஊழியர்கள் வழங்குகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…