பெற்ற தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய பிரபல நடிகை…. தெருவில் படுத்து உறங்கும் அவலம்…

சின்னத்திரையில் பிரபலமான நடிகையான தேவி கிருபா தனது தாயை வீட்டை விட்டு வெளியில் அனுப்பியுள்ளார். அவர் தற்பொழுது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆனந்தம்’ தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவிகிருபா. இந்த தொடரை தொடர்ந்து மாமா மாப்பிள, தென்றல், கல்யாணப்பரிசு போன்ற சீரியலில் நடித்துள்ளார். இதில் தென்றல் என்ற தொடரில் இவர் நடித்துள்ள புஜ்ஜிமா என்ற கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

   

இந்நிலையில் இவரின் தாயான சுவாதி கிருபா மதுரவாயல் காவல் நிலையத்தில் கூறியுள்ளதாவது, ‘தனது மகள் இறந்து விட்டாள். இனிமேல் எனக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருப்பதாக’ தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தனது மகளின் வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் உதவியாக இருந்துள்ளேன்.

என்னைப் போன்றே எனது மகன் கோகுலும் தேவி கிருபாவுக்கு டிரைவர் ஆகவும் இருந்துள்ளார். ஆனால் இதையெல்லாம் மறந்த தேவி கிருபாதன்னை விட்டு வெளியேற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், எனக்கு வயதாகிய காரணத்தினால் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டாள். ஆனால் இப்போது நான் எங்கு போவது என்று தெரியாமல் ஒரு அனாதை ஆச்சிரமத்தில் தான் தங்கி இருக்கேன்.

மேலும் பல நாள் கரடு முரடான பாதையில் கூட படுத்து இருக்கேன். என் மகன் தான் எனக்கான செலவைப் பார்த்துக்கிறான். இப்போதெல்லாம் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் பெற்றோர்களை சரியாக கவனிக்கமுடியாமல் ஆச்சிரமத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

வீட்டை விட்டு வெளியே வந்து எட்டு மாதம் ஆகிறது. எதிரில் இருக்கும் கோயில், தர்கா வாசல்லதான் படுத்துத் தூங்குறேன். தெரிஞ்ச யோகா, டான்ஸ் இப்போ கைக்கொடுக்குது. தெரிஞ்சவங்களுக்கு கிளாஸ் எடுக்கிறேன். பல நாள்கள் பட்டினி கெடந்தாச்சு. இது இப்படியே போனால் என் வாழ்க்கை கடைசியில் என்ன ஆகும் என்று தான் தெரியவில்லை.

தயவுசெய்து திருமணம் ஆனால் ஒரு குழந்தையோடு மட்டும் யாரும் நிறுத்தி விடாதீர்கள். இரண்டு குழந்தை கட்டாயம் பெற்றுக்கொள்ளுங்கள். காரணம் என் வாழ்க்கை இப்படி ஆனது போல உங்களில் யாருக்காவது ஒரு வாரிசு பார்க்கவில்லை என்றால் கூட மற்ற வாரிசு பார்க்கும் .இனிமேல் நான் யாரிடமும் கையேந்தி பணம் கேட்கமாட்டேன் என்னுடன் தொழில் உள்ளது நாள் என் பசியை போக்கிக்கொள்வேன்”. என்றும் குறிப்பிட்டுள்ளார்.