பழம்பெரும் நடிகை பத்மினியின்.. பலரும் பார்த்திடாத குடும்ப புகைப்படங்களின் தொகுப்பு..

70களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் மறைத்த  நடிகை பத்மினி.  தற்போது வரையிலும்  திரையுலகில் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார்.

   

தனது சிறந்த நடனம், நடிப்பு போன்றவற்றால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.  தமிழ் சினிமாவில் பரதநாட்டியம் என்றாலே பத்மினி என்றுதான் அனைவரும் கூறுவர்.

அந்த அளவிற்கு பரதநாட்டியத்தில் கைதேர்ந்தவர் ஆக இருந்தார். இவர் கதகளி, குச்சிப்புடி பரதநாட்டியம், மோகினி ஆட்டம் போன்ற  போன்ற நடனங்களை நன்றாக ஆடக் கூடியவர்.

இவர்’கல்பனா’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரை திரையுலகில் அறிமுகமானார். அது தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினியாக கொடிகட்டி பறந்தார்.

இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகர்களான சிவாஜி கணேசன், எம்ஜிஆர் ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

நடிகர் சிவாஜி உடன் மட்டும் இவர் 59 படங்களில் நடித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசன் உடன்  ‘தில்லானா மோகனாம்பாள்’ என்ற திரைப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் இன்று வரையிலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.இவர் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

நடிப்பிற்காகவும் தனது சிறந்த நடிப்பிற்காகவும் பல விருதுகளையும் வாங்கியுள்ளார். கடைசியாக இவர் தமிழில் ‘பூவே பூச்சூடவா’ என்ற படத்தில் நடிகை நதியாவுக்கு பார்ட்டியாக நடித்தார்.அதன் பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.

நடிகை பத்மினிக்கு லலிதா மற்றும் ராகினி என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர்.இவர்கள் இருவருமே சிறந்த நடன கலைஞர்கள். இவர்கள் மூவரையும் திருவாங்கூர் சகோதரிகள் என்றுதான் அழைப்பார்கள்.

நடிகை பத்மினி அமெரிக்காவைச் சார்ந்த ராமச்சந்திரன் என்ற மருத்துவர் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவிலேயே செட்டிலான பத்மினி சினிமாவை விட்டு விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார்.

அங்கேயே ஒரு பரதநாட்டிய பயிற்று நடன பள்ளி ஒன்றை தொடங்கினார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் அவர் பெயர் பிரேம் ஆனந்த்.

2006 ஆம் ஆண்டு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். நடிகை பத்மினி மகன் 1986 ஆம் ஆண்டு வெளிய வந்த ‘உதயம் பதின்ஜாரு’என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

இவர் தன் தாயைப் போலவே சினிமாவில் ஆல்ரவுண்டராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரால் சினிமா துறையில் நீடிக்க முடியவில்லை.

தற்போது உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் ஆங்கில பத்திரிக்கையில் பத்திரிகையாளராகவும், புகைப்பட கலைஞராகவும் வேலை பார்த்திருக்கிறார்.

தற்போது மறைந்த நடிகை பத்மினியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.