“விலையில்லா உணவு திட்டம்”…. 300 ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்…. வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.

   

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தளபதி விஜயின் ரசிகர்கள் தமிழக முழுவதும் பல சமூக நல சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இயற்கை பேரிடர் காலத்தில் விஜய் ரசிகர்கள் தான் முதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்தனர்.

தற்போது கடந்த சில மாதங்களாக விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் விலையில்லா விருந்து திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் ரசிகர்கள் 300 பேரை சென்னைக்கு வரவழைத்த நடிகர் விஜய் அவர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார்.

அதே சமயம் இந்த திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் பிழையில்லா விருந்து திட்டம் என்ற உணவு வழங்கும் திட்டத்தை எக்காரணத்தை கொண்டும் நிறுத்தக்கூடாது என விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இதற்காக பணம் ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

தன்னுடைய ரசிகர்களுக்கும் இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது அது தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.