தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடிய ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படம்… குவியும் வாழ்த்துக்கள்…

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரூபஸ்ரீ. இவர் முதன் முதலில் மலையாள படத்தில் அறிமுகமானார் .அவர் தமிழில் அறிமுகமானது ‘எங்க வீட்டு வேலன்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தான். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலம் அடைந்தார். இதை தொடர்ந்து இவர் ‘யாவரும் நலம்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

ஆனால் இவருக்கு திரைப்படங்களில் தான் நினைத்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் திருமணத்திற்கு பிறகு இவர் சீரியலில் நடிப்பதற்கு களமிறங்கினார். தற்பொழுது இவர் சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்திலும், மாமியார் கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கி வருகிறார். இவர்  முதன் முதலில் சன் டிவி சீரியலில் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள் ‘ சீரியல் மூலமாக குடும்பப் பெண்களின் வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து இவர் பாரதி கண்ணம்மா சீசன் 1 கண்ணம்மாவின் மாமியாராக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறார். இக்கதாபாத்திரம் இவருக்கு பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர். தற்பொழுது இவர் ரசிகர்கள் மனத்தில் நல்ல இடத்தை பெற்று விட்டார் என்றே கூற வேண்டும்.

இதை தொடர்ந்து தற்பொழுது இவர் ‘பாரதி கண்ணம்மா சீசன் 2’ வில் ஹீரோவுக்கு அம்மாவாக, அதே மாமியார் கதாபாத்திரத்தில் தான் நடித்த வருகிறார். நடிகை ரூபஸ்ரீ சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தற்பொழுது தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடுவதாக இணையத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் . இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் திரைபிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.