பாண்டிச்சேரி என்ன பாலஸ்தீன நாட்டிலயா இருக்கு.. கேப்டன் நினைவிடத்திற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா… பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்…!!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.  ‘அசத்தப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனது திரை பயணத்தை தொடங்கினார்.2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவளும் நானும்’ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   
அதைத் தொடர்ந்து  ஆச்சாரியங்கள், புத்தகம், ரம்மி,  கதை திரைக்கதை வசனம் இயக்கம் ,திருடன் போலீஸ்,  அட்டகத்தி,  சட்டப்படி குற்றம்,  உயர்திரு 420 போன்ற படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை.

2015 ஆம் ஆண்டு வெளியான ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தி கிரேட் இன் இந்தியன் கிச்சன்,  ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, தீர காதல் போன்ற பல படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அடங்கப்பா! ஒரிஜினல் அரசியல்வாதியே தோத்துடுவாங்க.. கேப்டன் சமாதியில் நடித்து  மாட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் - Cinemapettai

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்களின் இறப்புக்கு நேரில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செல்லவில்லை என்று தெரிகிறது. எனவே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு கடை திறப்பு விழாவின் போது அவர் பேசிய வீடியோவானது, தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பாண்டிச்சேரியில் இருந்து கேப்டன் இறப்பிற்கு வர முடியவில்லை. பாண்டிச்சேரி என வெளிநாட்டிலா உள்ளது என கலாய்த்து வருகின்றனர். வீடியோ இதோ,

View this post on Instagram

 

A post shared by Boopalan Bala (@boopalan91)