நடன இயக்குனர் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி மற்றும் மகன்களை பார்த்துள்ளீர்களா?…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நடன இயக்குனர் பிரபுதேவா.

   

இவர் ஏப்ரல் 3தேதி 1973 ஆம் ஆண்டு பிறந்தார். மைசூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பெற்றோர் சுந்தரம் ஒரு நடன ஆசிரியர்,  தாய் மகாதேவம்மா.

இவருக்கு ராஜூ சுந்தரம், நாகேந்திர பிரசாந்த் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர் முதலில் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் பின்னணி நடன கலைஞராக ஆடி இருந்தார்.

அதன் பிறகு  நடிகர் முரளி நடித்த ‘இதயம்’ திரைப்படத்தில் ‘ஏப்ரல் மேயிலே’ என்ற பாடலுக்கு நடன கலைஞராக திரையுலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து  இதயம்,வால்டர் வெற்றிவேல,பாபா,சூரியன்,ஜெண்டில்மேன்,அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் நடனமாடுபவராக இருந்தார்.

1994 ஆம் ஆண்டு வெளியான ‘இந்து திரைப்படத்தின்’ மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக புது அவதாரம் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து இவர் காதலன் ,மின்சார கனவு ,நாம் இருவர் நமக்கு இருவர், வானத்தைப்போல ,உள்ளம் கொள்ளை போகுதடா, தேவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் பௌர்ணமி ,போக்கிரி, பில்லு, எங்கேயும் காதல், வெடி , ஆர் ராஜ்குமார், ஆக்சிஜன் போன்ற பல படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழி படங்களையும் இயக்கியுள்ளார். இவர் ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கு   சிறந்த நடன ஆசிரியருக்கான  இந்திய தேசிய விருதை பெற்றார்.

இவர் தயாரிப்பாளர் ,இயக்குனர்,நடன அமைப்பாளர் ,நடிகர் என  பன் முகத்திறமையை  கொண்டவர்.

இயக்குனர் பிரபு தேவா ராமலத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பிரபு தேவாவின் மூத்த மகன், விஷால் 12 வயதில் மூலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு உயிரிந்தார்.

அதன்  பிறகு பிரபுதேவா விற்கும் ரமலதாவுக்கும் ஏற்பட்ட மன கசப்பின் காரணமாக 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

அதன் பின் பிரபுதேவா பிசியோ தெரபி டாக்டர் ஹிமானி என்பவரை காதலித்து2020ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவரின்  முன்னாள் மனைவியுடன் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.