திருமணத்திற்கு முன்னர் சினேகா – பிரசன்னா எப்படி இருந்தாங்க தெரியுமா?… ஆள் அடையாளமே தெரியலையே… நீங்களே பாருங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சினேகா, திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் என்னவளே திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான ‘ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், வசீகரா, புதுப்பேட்டை, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பவானி போன்ற திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

நடிகை சினேகா சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ‘அச்சம் உண்டு அச்சம் உண்டு’ என்ற திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து இவர்கள் தங்கள் வீட்டில் தங்களது காதலைப் பற்றி தெரிவித்து, இருவீட்டார் சம்மதத்துடன் 2012ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் மிக பிரம்மாண்டமாக, கோலாகலமாக நடைபெற்றது.

பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார். தற்பொழுது இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகள் தற்பொழுது ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வலம் வந்து கொண்டுள்ளனர்.

தற்பொழுது இவர்கள் வெள்ளித்திரையிலும் சரி சின்னத்திரையிலும் சரி பிஸியாக நடித்துக் கொண்டு வருகின்றனர். இணையத்தில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்பொழுது நடிகை சினேகா- பிரசன்னாவின் பலரும் பார்த்திடாத புகைப்படம்  இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இவர்கள் திருமணத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சினேகா பிரசன்னாவா இது?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….