நடிகை தேவயானி அழகாகவும், அதே இளமையுடனும் இருக்க காரணம் இதுதானா?… அவரை கூறிய வைரல் தகவல் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் ‘தொட்டால் சிணுங்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தனது குடும்ப பாங்கான முகத்தோற்றத்தாலும், தனது நடிப்பு திறமையாலும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

   

இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது காதலை வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. 2001ல் வீட்டை எதிர்த்து இவர்களது காதல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு தற்போது இனியா, பிரியங்கா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

வெள்ளிதிரையில் பட வாய்ப்புகள் குறையவே, இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். இவர் நடித்த ‘கோலங்கள்’ சீரியல் மிகப்பெரிய ஹிட் எடுத்தது. இதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து மிகப் பிரபலமானார் தேவயானி.

சில வருடங்கள் சின்ன திரையை விட்டு விலகிய இவர், ‘புது புது அர்த்தங்கள்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கினார். தற்பொழுது வரை பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார் தேவையானி.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் ‘இந்த வயதிலும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்?’ என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ‘அது தாய் தந்தையின் ஆசியும், கடவுளின் அனுகிரகமும் தான்’ என்று கூறியுள்ளார்.

மேலும் இவர் ‘எப்பொழுதும் நான் டயட் எல்லாம் இருந்ததில்லை. எண்ணெய்  உணவுகளையும், துரித உணவுகளையும் உட்கொள்வதில்லை. எவ்வளவு நேரமானாலும் வீட்டில் சமைத்து உணவுகளை மட்டும் தான் உட்கொள்வேன்’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் ‘பெண்கள் எப்பொழுதும் தங்களுக்காகவும் நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டும், என்று கூறியுள்ள அவர், தினமும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். எப்பொழுதும் நல்ல எண்ணங்களை மட்டுமே நினைக்க வேண்டும். அப்பொழுதுதான் முகமும் அகமும் பொலிவு பெறும்’ என்று ரசிகர்களுக்கு தனது அழகின் ரகசியத்தை பகிர்ந்துள்ளார் நடிகை தேவயானி.