சரத்பாபுவை உருகி உருகி காதலித்த ஜெயலலிதா.. எப்படியாவது அவருடன் குழந்தை பெத்துக்கணும்.. கடைசிவரைக்கும் நிறைவேறாத ஆசை..‌

தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை ஜெயலலிதா.தெலுங்கில் நடிகர் கமலஹாசனுடன் ‘இந்துருடு சந்துருடு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார். அந்தப் படமானது ‘இந்திரன் சந்திரன்’ என்ற பெயரில் டப்பிங் செய்து தமிழில் வெளியானது. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.  இவர் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பெரிய மருது’ மற்றும்  அஜித் நடிப்பில் ‘அவள் வருவாளா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதா  சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

   

அதில் நான் சரத்பாபுவை  காதலித்தேன் அவரது வாழ்க்கையில் கடைசி காலத்தில் நான் அவருடன் இருந்தேன். நான் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். அவர் மூலமாக குழந்தையை பெற்றுக் கொள்ளவும் விரும்பினேன் இருந்தாலும் திரையுலகத்தில் செல்வாக்கு மிக்க சிலர் எங்கள் திருமணம் நடைபெறாமல் தடுத்தனர். நாங்கள் ஒன்றாக பல பயணங்களுக்கு சென்றோம் எனது வாழ்க்கையில் என்னுடன் எப்போதும் இருக்க ஒரு வழிகாட்டி, ஒரு துணை, எனக்கு தெய்வ சக்தியால் வந்தது என்று நம்பினேன்.

அவர் மிகவும் நல்லவர் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம் எங்கள் ஆசை நிறைவேறுவதற்கு முன்பாக அவர் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் தான் மறந்த  நடிகர் சரத் பாபு இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சென்ற வருடம் உடல்நிலை குறைவால காலமானர். சரத்பாபு மறைந்து இத்தனை மாதங்கள் ஆன பிறகு அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ளார் நடிகை ஜெயலலிதா.