Mr&Mrs சின்னத்திரையில் தனது மனைவியுடன் சிரித்தபடி புகைப்படம் எடுத்த வடிவேல் பாலாஜி.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர். அதன் பின்னர் அது இது எது, மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் வடிவேலு பாலாஜி (42) .

   

இவர் பந்தயம், யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா, சுட்டபழம் சுடாத பழம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை திறமைக்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. கடந்த வருடம் நம்மைவிட்டு பிரிந்த பிரபலங்களில் ஒருவர் வடிவேல் பாலாஜி. அவரது இறப்பு அனைவருக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரது நினைவாக கலக்கப்போவது யாரு இறுதி கோப்பையை வடிவேல் பாலாஜி நினைவாக வடிவமைத்தார்கள்.

காமெடி மூலம் மக்களின் மனதை கவர்ந்த அவர் இப்போது இல்லையே என்று யோசிக்கும் போது அனைவருக்கும் கஷ்டம் தான். வடிவேல் பாலாஜி தனது மனைவியுடன் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் தனது மனைவியுடன் அவர் சிரித்தபடி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. சிரித்தபடி இருக்கும் பாலாஜி இப்போது இல்லையே என சிலர் சோகத்தில் உள்ளனர்.