அழகான தேவதை போல் மின்னிய கண்மணி….. 9வது மாத வளைகாப்பு நிகழ்ச்சி…. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்…!!!!

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பல கதாநாயகள்‌ இருக்கும் நிலையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தன் க்யூட்டான அழகினால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் தான் கண்மணி சேகர். இவர் பிரபல சீரியல் நடிகரான நவீனை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

   

இவர்கள் சமூக வலைத்தளங்களில் தனது க்யூட்டான போட்டோக்களை ஷேர் செய்து மகிழ்வார்.  இந்த க்யூட்டான ஜோடிக்கு என்று பல ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் கடந்த மாதங்களுக்கு முன் ஒரு சந்தோஷமான அறிவிப்பை வெளியிட்டனர். தங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியான தகவலை கூறினர்.

இந்நிலையில் தற்போது இவருக்கு ஒன்பதாவது மாதத்தில் கோலாகலமாக வளைகாப்பு நடத்தி உள்ளனர். இதற்கு திரைத் துறையினர் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வளைகாப்பு நிகழ்ச்சியில் தங்க சிலை போல் மிண்ணிய கண்மணியின்  கியூட்டான புகைப்படங்கள் காட்டு தீ போல் பரவி வருகின்றது.