
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தேவிகா. இவருடைய மகள் தான் கனகா. இவர் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனது 26 ஆவது வயதில்’ கரகாட்டகாரன்’ படத்தில் ஹீரோயினியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.தமிழ் சினிமா வரலாற்றில் இன்றளவும் அதிக நாள் ஓடிய படங்களில் ஒன்றாக கரகாட்டகாரன் படம் இருந்து வருகிறது. நடிகை கனகா 6 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றியுள்ளார். ஆறு ஆண்டுகளில் சுமார் 30 திரைப்படத்திற்கு மேலாக நடித்துள்ளார்.
ஆனால் 1995 ஆம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களின் நடிப்பது குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை .இந்நிலையில் சுமார் 17 ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. பொதுவெளியிலும் அதிகமாக வெளிவருவதில்லை. அண்மையில் குட்டி பத்மினி எடுத்த புகைப்படம் வெளியிட்ட போதுதான் அவர் எந்த அளவுக்கு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் என்பது பலருக்கும் தெரிய வந்தது.
இந்நிலையில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து 1992 ஆம் ஆண்டு ‘சாமுண்டி’ என்ற திரைப்படத்தில் கனகா நடித்திருந்தார் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் சரத்குமார் அவர்களிடம் கனகாவை பற்றி கேள்வி கேட்கப்பட்டது . அதில் திறையுலகையை விட்டு கனகா ஒதுங்க காரணம் என்ன? என்று தொகுப்பாளர் கேட்க. அதற்கு நடிகர் சரத்குமார் கனகா ஒரு ஒப்பற்ற உழைப்பாளி, சினிமாத்துறை மீது அவர் கொண்டிருந்த காதல் இடு இணையில்லாதது.
ஆனால், அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சில ஏமாற்றங்களும், வருத்தங்களும் அவர் மனதில் அழியாத காயமாக மாறிவிட்டது . நாளடைவில் அதுவே அவருக்கு மிகப்பெரிய மன அழுத்தமாக மாறிவிட்டது. அதனால் அவர் சினிமாவை விட்டு விலகா காரணமாக அமைந்தது. என்று நான் நினைக்கின்றேன் என்றார். சினிமா துறையில் இது போன்று பலருக்கும் மன அழுத்தங்களால் அவதிப்படுகின்றனர. இதனால் தான் நான் சினிமா துறையில் பயணிப்பவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்று கூறி வருகிறேன் என்று அதில் கூறியுள்ளார்.