இந்த காலகட்டத்தில் வெள்ளித் திரையை விட சின்னத்திரை தான் மக்கள் மத்தியில் அதிகமாக பார்த்து வருகின்றனர்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் புது புது தொடர்களும் ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றனர்.
வெள்ளித் திரையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களைக் கூட மக்கள் மறந்து விடுவார்கள்.
ஆனால் சின்னத்திரையில் சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் நடிகைகள் கூட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துயுள்ளனர்.
அந்த வகையில் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த சீரியல் தான் ‘ரோஜா’ இந்த சீரியலானது சன் டிவியில் ஒளிபரப்பானது .
இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பிரியங்கா. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.
ஆந்திரவில் பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் அங்கே படித்து முடித்தார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
2010-ஆம் ஆண்டு சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அந்தாரி பந்துவையா’. இப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடிகை பிரியங்கா நடித்திருந்தார்.
இவர்தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘காஞ்சனா 3’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு ‘ரோஜா’சீரியல் மூலமாக தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
இவர் இன்ஸ்டாகிராமில் 6.4 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாகஇருப்பார்.
தற்போது இவர் ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும்’ சீதாராமன்’ என்ற மெகா தொடர் சீதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை பிரியங்கா நல்காரி மலேசியாவில் முருகன் கோவிலில் திடீர் திருமணம் செய்து கொண்டார் .
ராகுல் வருமா என்னும் தொழிலதிபதனை பிரியங்கா நல்காரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது திருமணம் நடைபெறாமல் போனதாக சமூக வலை தளங்களில் செய்திகள் வைரலாக பரவியது.
இந்நிலையில் பல தடைகளை தாண்டி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது தன் கணவருடன் டைம் ஸ்பென் பண்ணும் புகைப்படங்களை ,
தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது வைரலாகி வருகிறது.