பாருங்களே….! யானை பாகன் ஊட்ட யானை எவ்வளவு அழகா இளநீர் சாப்பிடுதுன்னு….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

திருச்செந்தூரை சேர்ந்த யானை ஒன்று அழகாக இளநீர் மற்றும் அந்த காயை சேர்த்து சாப்பிடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக யானை என்றால் யாருக்கு தான் பிடிக்காது.

   

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானை என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு ஜீவன். காட்டில் இருக்கும் யானைகளை தாண்டி நாம் சுற்றுலா தளங்களில் மற்றும் கோவில்களில் பார்க்கும் யானைகள் மிகவும் அழகாக இருக்கும். அது மிகவும் சாதுவாக இருக்கும்.

பொதுவாக கோவில்களின் வாசலில் நின்று கொண்டிருக்கும் யானையிடம் காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கி செல்வோம், அதெல்லாம் ஒரு நினைவுகள். இப்போதும் பல கோவில்களில் யானைகள் இருக்கின்றது. இந்த கோவில் யானைகளை யானை பாகங்கள் பத்திரமாக பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.

யானை எப்படி சாப்பிடும் என்று நமக்கு தெரியும் . அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது யானை பாகன் யானைக்கு இளநீர் மற்றும் தேங்காயை சேர்த்து கொடுக்கிறார். அதனை அவ்வளவு அழகாக யானை குடிக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, இதனை நீங்களும் பாருங்கள்…