விவாகரத்து பெற்று தனியாக வாழும் சீரியல் நடிகை தீபாவின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்…

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை தீபா.

   

அன்பே சிவம் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்த இவர் சீரியல் உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

சீரியலில் மட்டுமல்லாமல் அனைத்து முன்னணி சேனல்களிலும் இவர் பிரபலமாகிவிட்டார்.

சீரியல்களில் இவரின் வில்லி கதாபாத்திரத்தை ரசிக்க தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

இவர் சீரியல் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் பிறந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சீரியல் பலவற்றிற்கு தயாரிப்பு மேலாளராக பணியாற்றி தற்போது தயாரிப்பாளராக உயர்ந்திருக்கும் சாய் கணேஷ் பாபு என்பவர் தான் தீபாவுக்கு அறிமுகம் கொடுத்துள்ளார்.

அவர் மேலாளராக இருந்த பல சீரியல்களில் நடிப்பதற்கு தீபாவுக்கு வாய்ப்பு கிடைக்க இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது .

இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

அதேசமயம் சாய் கணேஷ் பாபுவை தீபா கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவின் சில குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.