அடேங்கப்பா.. கோலங்கள், துளசி சீரியல்களில் நடித்த நடிகையா இது..? அவரின் கணவரை பார்த்துளீர்களா..?

என்ன தான் பல சீரியல்கள் இருந்தாலும் ஒரு சில சேரியலைகளை நம்மால் இன்றுவரை மறக்க முடியாது, அந்த வகையில் கோலங்கள், துளசி சீரியல்களில் நடித்திருக்கும் சந்திராவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. விஜய் டிவியில் ஒரு நாடகத்தில் வந்துவிட்டாலும் அவர்கள் பெரிய அளவில் ரீச் ஆகிவிடுகின்றனர்.

   

அந்தவகையில் விஜய் டிவியில் காதலிக்க நேரமில்லை சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர்தான் சந்திரா லெட்சுமணன். இவர் சினிமாவிலும் ஸ்ரீகாந்த் நடித்த மனசெல்லாம் என்னும் படத்தில் நடித்து இருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான துளசி சீரியலில் இவர் தான் மெயின் ஹீரோயினாக நடித்தார்.

சன் டிவியிலும் சொந்த பந்தம் சீரியலில் நடித்தவர் அதன் பின்பு சின்னத்திரை பக்கமே காணவில்லை. வெள்ளித்திரையில் ஜெயம் ரவியின் தில்லாலங்கடி படத்தில் நடித்தவருக்கு அதன் பின் ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் வந்திருக்கிறது. அம்மணிக்கு திருமணம் முடிந்து தன் சொந்த ஊரான கேரளத்திலேயே செட்டிலாகிவிட்டார்.

இவர் இப்போது மலையாளத்தில் ஒன்னும் ஒன்னும் மூணு என்னும் தொடரிலும் நடித்து வருகிறார். திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இப்போதும் கூட நாம் சீரியலில் பார்த்த துளசி போலவே நச்சென அழகை மெயிண்டைன் செய்கிறார். அவர் தன் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினரோடு இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி, வைரல் ஆகிவருகிறது.