அந்த மனசு இருக்கே….. அது யாருக்கு வரும்….! சுமையுடன் சென்றவருக்கு உதவிய பேருந்து ஓட்டுனர்….. குவியும் பாராட்டு….!!!!

சுமையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளி கொண்டு சென்ற நபருக்கு பேருந்து ஓட்டுனர் உதவி செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் குவிந்து வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மனிதாபிமானம் என்பது குறைந்து கொண்டே செல்கின்றது. விலங்குகளுக்கு இருக்கும் நன்றி உணர்வு கூட இன்று இருக்கும் மனிதர்களுக்கு இல்லை.

   

அவரவர்கள் நாம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்று தான் நினைக்கிறார்கள். ரோட்டில் யாருக்காவது விபத்தில் இருந்தால் கூட அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து பரிதாபம் என்று போடும் நபர்கள் தான் தற்போது அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணம் யாருக்கும் வருவதில்லை.

ஆனால் இங்கு ஒரு பேருந்து ஓட்டுநர் தன்னால் முயன்ற உதவியை ஒரு நபருக்கு செய்த வீடியோ ஆனது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. ஒரு ரிக்ஷா ஓட்டுநர் தனது ரிக்ஷா முழுவதும் பெட்டை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு ஓட்டி செல்கிறார். இதை பார்த்த பேருந்து ஓட்டுநர் அவருக்கு பேருந்து மூலமாக பின்னால் இருந்து தள்ளுவதற்கு உதவி செய்கிறார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….