ஆசை ஆசையாக ஓடியாடி விளையாடிய சிறுமிகள் திடீர் மரணம்! நடந்தது என்ன?

தமிழகத்தின் தருமபுரியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் பண்ணைக் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

தருமபுரியின் கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், இவரது மனைவி இளையராணி, இவர்களுக்கு சாதிகா (வயது 5) மற்றும் தனுஸ்ரீ (3) ஆகிய 2 மகள்களும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.

   

இந்நிலையில் கொட்லு மாரம்பட்டியில் உள்ள சிறுமிகளின் பாட்டி சத்தியவாணி என்பவர் தனது வீட்டுக்கு 2 சிறுமிகளையும் சில நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றார்.

நேற்று சத்தியவாணி சிறுமிகள் மற்றும் சந்துரு (5) ஆகியோரை அழைத்து கொண்டு தன்னுடைய மல்லிகை தோட்டத்திற்கு சென்றார். பின்னர் மூதாட்டி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அங்கு பண்ணைக் குட்டையில் தண்ணீர் பாயச்சுவதற்காக 4 அடி ஆழத்துக்கு தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருந்தது, விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள், சிறுவன் பண்ணீர் குட்டையில் இறங்கினர்.

அப்போது எதிர்பாராதவிதமாக குட்டையில் இருந்த தண்ணீரில் சிறுமிகள் இருவரும் மூழ்கி விட்டனர். சிறுவன் சந்துரு குட்டையில் இருந்து மேலே ஏறி வந்து விட்டான். சிறுவனின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்ப்பதற்குள் சிறுமிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து சிறுமிகளின் உடல்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.