![video 1 (6)](https://awakeindiapac.com/wp-content/uploads/2022/11/video-1-6.jpg)
மழை பெய்து ரோட்டில் தண்ணீர் முழுவதும் நின்று கொண்டுள்ளது. அப்பக்கம் வந்த ஒரு நபர் தனது கால் நினைய கூடாது என்பதற்காக ஒரு சேரை தனது காலில் கட்டிக்கொண்டு கயிறை பிடித்து நடந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த வீடியோ.
பொதுவாக மழைக்காலங்கள் என்றாலே ரோடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் .அந்த சமயங்களில் அதில் நடப்பது என்பது சற்று கடுமையான விஷயம் தான். இருந்தாலும் மக்கள் அதில் நடந்து தான் செல்கிறார்கள். ஆனால் ஒரு சில அதிபுத்திசாலிகள் தான் தண்ணீர் தன் மீது படக்கூடாது என்பதற்காக பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது போன்று நடக்கும் விஷயங்களை நாம் ஏராளமாக பார்த்திருக்கிறோம் .
புதுவிதமாக யோசித்து இப்படி எல்லாம் செய்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் தான் இந்த வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகின்றது. அவர் சேரை தனது காலில் கட்டிக்கொண்டு ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து கயிறை பிடித்து நடக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதை பார்த்த பலரும் கால்ல தண்ணி பட்டா என்ன இப்போ? இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram