இதெல்லாம் படத்தில் தானே பார்த்திருக்கோ…. காதல் மனைவியை கோவில் மலை மேல் தூக்கி சென்ற கணவன்…. வைரலாகும் வீடியோ….!!!

கணவர் ஒருவர் தனது காதல் மனைவியை மலை மேல் இருக்கும் கோவிலுக்கு படிக்கட்டில் தூக்கி சென்ற வீடியோ  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி ஏதாவது சிறிய சண்டை வந்துவிட்டால் போதும் விவாகரத்து என்று கூறிக்கொண்டு கோர்ட் வாசலில் காத்து கிடக்கிறார்கள்.

   

தற்போதயெல்லாம் விவாகரத்து என்பது மிகவும் சுலபமாகி விடுகின்றது. ஆனால் அதிலும் சிலர் பாசமாக வாழ்ந்து வருகிறார்கள்.  ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்து அக்கரையாக பார்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக நாம் டிவி சீரியல்களிலும், சினிமாக்களிலும் காதலன் காதலியை தூக்கிக் கொண்டு மலை மேல் ஏறுவது, கோவிலுக்கு செல்லும்போது காலில் அடிபட்டு விட்டால் அவரை தூக்கிக் கொண்டு செல்வது போன்றவற்றை பார்த்திருப்போம்.

ஆனால் இங்கு ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது .  அந்த வீடியோவில் கணவர் உண்மையாகவே தனது மனைவியை தோளில் சுமந்து கொண்டு படியில் கஷ்டப்பட்டு ஏறி செல்கிறார். மலைமேல் உள்ள கோயிலுக்கு தனது மனைவியை இப்படி தூக்கிக்கொண்டு செல்லும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…