![xsx](https://awakeindiapac.com/wp-content/uploads/2022/05/xsx.jpg)
குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.
வளரிளம் பருவத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையையும், அவர்களின் ரசனையையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும்.
இங்கேயும் அப்படித்தான் கேரளத்தில் ஒரு கோயில் விசேச நிகழ்ச்சிக்கு செண்டை மேளம் அடித்து அசத்துகிறார்கள். அதை ஒரு குட்டி தேவதைப் பார்க்கிறது. அந்த க்யூட்டான இசைக்கு மயங்கிய குட்டி தேவதை, செம மாஸாக அந்த இசைக்கு ஏற்ப எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆட்டம் போடுகிறது. இந்த பிஞ்சு தேவதையின் ஆட்டத்தைப் பாருங்கள். நம்மையும் அறியாமல் நமக்குள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இதோ அந்தக் காட்சி!…
View this post on Instagram