‘சிவாஜி வந்ததுக்கு அப்புறம்தான் எம்ஜிஆர் க்கே சாப்பாடு’…. நடிகர் நந்தகுமாரின் வைரலாகும் நேர்காணல் இதோ….

நடிகர் நந்தகுமார் நடிகர் சிவாஜி பற்றிய உணர்ச்சிபூர்வமான நேர்காணல் ஒன்றை தற்பொழுது அளித்துள்ளார்.

நடிகர் நந்தகுமார் என்னும் குணச்சித்திர நடிகரின் பெயர் சொன்னால் மட்டும் நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால் அவரைப் பார்த்தாலே உடனே சிரிப்பு வரும்படியான முகம். தெளிவான வசனம், உச்சரிப்புடன் கூட சேர்ந்து கொள்ளும் அவர் ஏற்ற கதாபாத்திரங்களும் அக்கதாபாத்திரத்தின் பெயர்களும் நம் மனதில் அப்படியே பதிந்து போயிருக்கும்.

   

இவர் இயக்குனர் எஸ் பி முத்துராமனின் ‘ஒரு கோயில் தீபங்கள்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து கண் சிமிட்டும் நேரம், பெற்றால் தான் பிள்ளையா, சபாஷ் பாபு, தங்கமான ராசா, அழகன் என 70 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் இன்றி இருந்த அவர் சின்னத்திரையில் ‘ சித்தி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். இவர் ‘அண்ணாமலை’ யில் நடித்த ‘சாத்தப்பன்’ என்ற கதாபாத்திரத்தின் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து செல்வி, செல்லமே என வெள்ளித்திரையில் கிடைக்காத புகழ் அவருக்கு சீரியல்கள் மூலம் கிடைத்தது.

இவர் ஒரு தீவிர சிவாஜி ரசிகர். இவர் எப்பொழுதும் மேடைகளில் பேசும் பொழுதும், பேட்டிகளில் பங்கேற்கும் பொழுதும் ‘நான் சிவாஜி ரசிகன்’  என்பதை கூறிக் கொண்டே இருப்பார். தற்போது அவர் நடிகர் சிவாஜி பற்றி அளித்திருக்கும் உணைர்ச்சிபூர்வமான நேர்காணல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….