நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தைகளை பார்க்க வீட்டிற்கே சென்ற பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம் உள்ளே….

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தைகளை பார்க்க பிரபல நடிகை ராதிகா அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்களுடைய திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் பல நாடுகளுக்கு ஹனிமூன் சென்று அப்புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

   

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக நடிகை விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதை தொடர்ந்து பல சர்ச்சைகளும் பல பிரச்சனைகளும் எழுந்தது. தற்பொழுது அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.

சமீபத்தில் தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் அழகான வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் தனது இணையத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க அவருடைய வீட்டிற்கு பிரபல நடிகை ராதிகா சரத்குமார் சென்றுள்ளார். அங்கு அவர் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினருடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாக்கப்ட்டு வருகிறது.

இதோ அந்த பதிவு…