பாட்டியுடன் மல்லுக்கட்டி சண்டை போடும் சுட்டி பொண்ணு.. வைரலாகும் வீடியோ.. இந்த வயசுலயே என்ன ஒரு வில்லத்தனம்?

ஒரு குட்டிக் குழந்தை செய்யும் செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி அந்தக் குழந்தை என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

   

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தை அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

வீட்டில் இருக்கும் அவரது பாட்டி, அந்தக் குழந்தையுடன் செல்லமாக ச.ண்.டை செய்கிறார். பதிலுக்கு அந்தக் குழந்தையும் அவருடன் சரிக்கு, சமமாக ச.ண்.டைக்கு நிற்கிறது. இத்தனைக்கும் அந்தக் குழந்தை இன்னும் பேசக்கூடத் தொடங்கவில்லை. அதனிடையிலேயே தன் பாட்டியோடு சரிக்கு, சமமாக நின்று ச.ண்.டை போடுகிறது. அது ச.ண்.டை இல்லாத சிணுங்கலாக இருந்தாலும் நம்மையும் அறியாமல் அது வெகுவாக ரசிக்க வைக்கிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.