ரோட்டில் பொருட்கள் விற்றுக் கொண்டிருந்த சிறுமி….. அவர் ஆசைப்பட்டதை வாங்கி கொடுத்த ஆதரவாளர்…. செம வைரலாகும் வீடியோ…!!!

ரோட்டில் புத்தகம், பட்ஸ் போன்றவற்றை விற்றுக் கொண்டிருக்கும் சிறுமிக்கு ஒரு நபர் தங்களால் முடிந்த பொருட்களை வந்து சிறுமிக்கு வாங்கி கொடுக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.  நாம் பெரும்பாலும் பெருநகரங்களில் சிக்னல்களில் நிறைய குழந்தைகளையும், கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பலரையும் பார்த்திருப்போம். அவர்கள் யாரும் ஆசைப்பட்ட அந்த வேலையை செய்வதில்லை. தங்களின் குடும்ப வறுமை, வேலையின்மை போன்றவற்றின் காரணமாக வைத்து பசிக்காக இப்படி ஒரு வேலையை செய்து வருகிறார்கள்.

   

சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் சிக்னல் போட்டால் போதும் குடுகுடுவென்று ஒரு 4, 5 குழந்தைகள் இந்த புக்கை வாங்கிக் கொள்ளுங்கள் இதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பொருள்களை விற்பதை பார்க்கிறோம் .அப்படி ஒரு சிறுமி புத்தகம், பட்ஸ் போன்றவற்றை விற்று வருகிறார். அவருக்கு ஒருவர் உதவி செய்யும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது சிறுமி ஒருவர் சிக்னல் மற்றும் ரோடுகளில் புத்தகம், பட்ஸ் போன்றவற்றை விற்று கொண்டிருக்கிறார். அதை பார்த்து ஆதரவாளர் ஒருவர் அவரிடம் சென்று உனக்கு என்ன வேண்டும் கேட்க அவர் படிப்பதற்கு புத்தகங்கள், நோட்டு வேண்டும் என்று கேட்டுள்ளார். பின்னர் அவரும் கடைக்கு சென்று வேண்டிய அனைத்தையும் வாங்கிக் கொண்டு அந்த சிறுமியிடம் கொண்டு போய் கொடுக்கின்றார். அதை வாங்கிக் கொண்ட சிறுமி சந்தோஷமாக செல்கிறார். இந்த வீடியோ பலரின் மனதை கவர்ந்துள்ளது. இதனை நீங்களும் பாருங்கள்…