எந்த உதவியா இருந்தாலும் நான் செய்றே… ரசிகரின் மரணம்… குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன ஜெயம் ரவி… வைரல் புகைப்படம்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

   

தமிழ் சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் கடந்த நிலையிலும் குறிப்பிட்ட அளவில் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஏனென்றால் தனக்கு பிடித்த கதையை தேர்வு செய்து நடிப்பவர் ஜெயம் ரவி.

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழிச் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து சைரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்திருந்தது. தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சென்னை எம்ஜிஆர் நகர் ஜெயம்ரவி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த ராஜா என்பவர் உயிரிழந்தார். இவருக்கு வயது 33. சென்னை கேகே நகரில் வசித்து வரும் இவர் உடல்நல குறைவால் காலமானார்.

ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த ராஜா ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பாக பல நற்பணிகளை செய்து வந்தார். இவரின் மரண செய்தியை கேட்ட நடிகர் ஜெயம் ரவி அவரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் எந்த உதவியாக இருந்தாலும் தான் செய்து தருவதாக கூறியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது.