மதுரை சித்திரைத் திருவிழா… கள்ளழகரை நேரில் கண்ட சூரி மற்றும் சசிகுமார்… வைரல் புகைப்படங்கள்…!!

மதுரையில் சித்திரை திருவிழா என்றால் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். நேற்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

   

சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மக்களோடு மக்களாக கலந்து கொண்ட சூரி கள்ளழகரை நேரில் பார்த்தது குறித்து தனது அழகான அனுபவங்களை பகிர்ந்திருந்தார்.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த நடிகர்களில் சூரியும் ஒருவர். இன்று கதாநாயகனாக உயர்ந்திருக்கின்றார்.

சீரியல்களில் தொடங்கி நகைச்சுவை நடிகராக மாறி பின்னர் தற்போது விடுதலை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக நடித்த அசதி வருகிறார்.

தொடர்ந்து நடித்து வரும் இவர் மதுரையில் சித்திரை திருவிழாவில் கலந்துகொண்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது பூக்கள் தூவி தன்னுடைய மகிழ்ச்சியை காட்டி இருந்தார்.

மேலும் தன்னுடைய instagram பக்கத்தில் அரை டவுசர் வயதில் அப்பா தோல் மீது உட்கார்ந்து முதன்முறையாக கள்ளழகரை பார்த்தேன். அதுக்கப்புறம் இப்போதான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன். நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து நடிகர் சசிகுமாரும் இந்த விழாவிற்கு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்திருந்தார். இயக்குனரும் நடிகருமான சசிகுமார் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிப்பவர்.

இவரின் திரைப்படங்கள் என்றாலே மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் குடும்ப பெண்களை கவரும் வகையில் இவரது நடிப்பு இருக்கும். இவரும் மதுரை சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டிருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.