முக்கிய பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் கவுண்டமணி… அவரா இது?… அடையாளமே தெரியலையே…

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் கவுண்டமணி. 80களில் தொடங்கி 90 கள் வரை பல படங்களில் நடித்த இவருக்கு ‘செந்தில்’ தான் ஏற்ற காம்போ. இவருடைய பல படங்கள் ஹிட் ஆவதற்கு நடிகர் செந்திலுக்கும் ஒரு பங்கு உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவர்களது கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக இருந்தது.

   

இவர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வாய்மை’ எனும் படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது பல வருடங்களுக்கு பிறகு நடிகர் கவுண்டமணி ‘பழனிச்சாமி வாத்தியார்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்பொழுது நடிகர் கவுண்டமணி முக்கிய பிரபலங்கள் சிலருடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ இப்புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை குஷ்பூ.

இவர் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு புகைப்படங்களை பதிவு செய்த வண்ணமே உள்ளார் .அந்த வகையில் தற்பொழுது தனது கணவர் சுந்தர் சி, சத்யராஜ் மற்றும் கவுண்டமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இப்புகைப்படத்தை பகிர்ந்து அவர் தனது கணவரின் பேவரைட் புகைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இப்புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு….