நடிகர் சிம்புவின் தங்கையான இலக்கியா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் சிம்பு. இவர் தனது ரசிகர்களால் ‘சிலம்பரசன்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவரின் தந்தை நடிகர் டி.ராஜேந்திரன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தந்தையை போன்றே மகனும் தற்பொழுது திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இத்திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்தது. அந்த அளவிற்கு இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளது. இவர் நடிப்பில் 2021ல் வெளிவந்த ‘மாநாடு’ திரைப்படம் 100 கோடியையும் தாண்டி வசூலித்து மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்துதல’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
அதில் ‘எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது’ எனக் கூறியுள்ளார். 2014ம் ஆண்டு இலக்கியா அவினாஷ் என்ற பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 8 வயதில் ஜேசன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியாவின் பதிவிற்கு சிம்பு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வைரலாகும் பதிவு இதோ…