விருமாண்டி அபிராமியின் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்துளீர்களா…வைரலாகும் புகைப்படம்….

தமிழ் திரை உலகில் 90களில் மிகப் பிரபலமாக வலம் வந்தவர் நடிகை அபிராமி. இவர் 1995 ஆம் ஆண்டு ‘கதபுருஷன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக  முதலில்  திரையுலகில் அறிமுகமானார்.

   

இவருடைய பெயர் திவ்யா கோபி குமார். திரை உலகிற்காக தன் பெயரை அபிராமி என்று மாற்றிக் கொண்டார்.

இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார்.

இப்படமானது  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் பல வாய்ப்புகள் கிடைத்தனார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் 2004ஆம் ஆண்டு  வெளியான  ‘விருமாண்டி படத்தில்’ கதாநாயகியாக  நடித்துள்ளார்.

அபிராமிக்கு  இப்படமானது  திரை உலக பயணத்திற்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இவர்  தமிழில் மிடில் கிளாஸ், மாதவன் ,தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதன்பின் அவருக்கு திரையுலகில் வாய்ப்பு குறைந்த நிலையில் ஆசியா நெட் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

நடிகை அபிராமி கேரளாவில் மிகப் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்த பிறகும் திரையுலகை இருந்து விட்டு விலகாமல் அதன் பின் மூன்று படங்கள் நடித்துள்ளார்.

இவர் தற்போது ஜோதிகா நடித்த  ’36 வயதினிலே’ படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் கன்னடம்  மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திரையுலகில் வாய்ப்பு இல்லாத நிலையில் சீரியல் பக்கம் திரும்பியுள்ளார் அபிராமி. ‘கனா கண்மணி’ என்ற சீரியல் நடித்துள்ளார்

அபிராமிக்கு ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளனர்.  இவர்  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவரின் குடும்ப புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.