நடிகை ஆலியா மானசா தனது கணவருக்கு கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…அதன் விலை இவ்வளவா?… ஷாக்கான ரசிகர்கள்…

நடிகை ஆலியா மானசா தனது கணவருக்கு வாங்கி கொடுத்த விலை உயர்ந்த பரிசை பற்றி தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.  இந்த சீரியலில் நடிகை ஆலியா மானசா, சஞ்சீவ் இருவரும் இணைந்து நடித்தனர். சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். நடிகர் நடிகைகள் இப்பொழுது எல்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது.

   

அதைப்போல இவர்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு ஐலா, அர்ஷ்  என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஆலியா மானசா இரண்டாவது பிரசவத்தின் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். தற்பொழுது குழந்தை பிறந்த பிறகு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘இனியா’ சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவரது கணவர் சஞ்சீவ் அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது இருவரும் சன் தொலைக்காட்சியில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சஞ்சீவ் ஆலியாவிற்கு ஹேண்ட் பேக்கை பரிசாக அளித்து இருந்தார்.

தற்பொழுது இவர்கள் புத்தாண்டை கொண்டாட துபாய்க்கு சென்றுள்ளனர். அங்கு கணவருக்கு விலை உயர்ந்த சூட் கேஸ் ஒன்றை பரிசளித்துள்ளார். தற்பொழுது நடிகர் சஞ்சீவ் அந்த சூட்கேசுடன் நின்று புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘இந்த பிராண்டா சூப்பர்’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு இதோ….

 

View this post on Instagram

 

A post shared by sanjeev (@sanjeev_karthick)