
தமிழ் சினிமா மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தேராதூன் பூர்வீகமாக கொண்டவர்.தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.
இப்படத்தில் துணை கதாநாயகியாக தான் அறிமுகம் ஆகினார்.பின்னர் தனது கடின உழைப்பால் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.
இவர் தமிழில் மழை, அழகிய தமிழ் மகள், கந்தசாமி, குட்டி, புலி, சிக்கு புக்கு பவித்ரா, சந்திரா போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழி படங்கள் நடித்துள்ளர்.
நடிகை ஸ்ரேயா சரண் உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு தற்போது கதாநாயகியாக நடிப்பதில் இருந்து விலகி கொண்டார்.
தற்போது கிடைக்கும் படங்களில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி என நடித்து வருகிறார்.தற்போது இவருக்கு தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக நடித்த சண்டைக்காரி படம் வெளியாக உள்ளது. தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘சண்டைக்காரி’ என்ற படம் வெளியாக உள்ளது.
தற்போது தன் குடும்பத்துடன் விடுமுறை நாட்களை என்ஜாய் செய்து வருகிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.