அடுத்தடுத்த தொடரும் மரணங்கள்… மயில்சாமியை தொடர்ந்து மரணமடைந்த பிரபல காமெடி நடிகை… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…

மலையாளத்தில் பிரபல காமெடி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுபி சுரேஷ். இவர் நடனம் மற்றும் ஸ்டேஜ் காமெடி நிகழ்ச்சிகளில் தன்னுடைய தனித்திறன் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சினிமாலா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

   

தொகுப்பாளராக இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார் சுபி சுரேஷ். இதைத்தொடர்ந்து சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குழந்தைகள் பங்குபெறும் ‘குட்டி பட்டாளம்’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

இதில் குழந்தைகள் போலவே மாறி அவர்களுக்கு ஈடாக மழலை மொழி பேசியிருந்தது பலரை வெகுவாக கவர்ந்தது.. சின்னத்திரையில் கிடைத்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார் நடிகை சுபி சுரேஷ்.

இவர் கிரிகானதான், ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ், காரியஸ்தன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களில் தோன்றியுள்ளார். காமெடி கலந்து இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் நடிகை சிபி சுரேஷ் திடீரென கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுதுதான் சின்ன திரையில் இருந்து படிப்படியாக பிறகு தனது திறமையால் முன்னேறி வெள்ளி திரைக்கு வந்து பிரபலமாகிக் கொண்டிருந்தார் நடிகை சுபி சுரேஷ்.

இந்நிலையில் இவரது மரணம் ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சுபி சுரேஷின் மறைவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் காமடி நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து தற்பொழுது மலையாள நடிகை சுபி சுரேஷ் மரணம் அடைந்திருப்பது திரை உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.