தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவராக வலம் வருபவர் . கல்லூரி படிக்கும்போதே மாடல் தனது காலடித்தடத்தை பதித்தார்.அதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு சிம்ரன் நடிப்பில் வெளியான ,’ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்து மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர்.2002 ஆண்டு தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ மௌனம் பேசியதை’மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் தமிழில் சாமி, கில்லி ,ஜெய், நந்து, ஆறு ,கிரீடம், பீமா ,குருவி, அபியும் நானும், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .இப்படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது . இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் லியோ. நடிகை திரிஷா அஜித் குமாரின் ‘விடா முயற்சி’, மோகன்லாலின் ‘ராம்’, கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ மற்றும் சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பர’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
திரிஷா இப்போது விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள தனது ‘கில்லி’யின் ரீ ரிலீஸில் ஈடுபட்டுள்ளார். தற்போது மலையாளப் படமான ‘ஐடெண்டிட்டி’ என்ற படத்தில் நடிகை திரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்குகிரார்கள். இந்த படத்தில், நடிகை திரிஷா மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
மலையாளப் படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகை திரிஷா படப்பிடிப்பு ஈரோட்டிற்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்க்க அவரது வேனுக்கு வெளியே பெரும் கூட்டமாகக் கூடினர். திரிஷா தனது வேனில் இருந்து தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்தார். இதை பார்த்த ரசிகர்கள் விஜய் போல நடிகை திரிஷாவும் ரசிகர்களை சந்தித்து உள்ளார் ஒரு வேலை அரசியலில் களம் இறங்குவாரோ. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Trisha shooting spot 💥 Shooting is now progressing in Erode ❤
Her craziness 😍😍♥️♥️#TrishaKrishnan pic.twitter.com/ftT517y59T
— Vakugu (@vakugu) April 22, 2024