பிரபல நடிகையான ரெஜினா கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது அஜித் நடித்த விடாமுயற்சி படத்திலும் ரெஜினா நடித்துள்ளார்.
மேலும் நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகும் செக்ஷன் 108 படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிப்பு மட்டுமில்லாமல் சமூகப் பணிகளிலும் தன்னை தீவிரமாக ரெஜினா ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தற்போது கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்காக SUP குழுவினரோடு ரெஜினா இணைந்துள்ளார்.
இது குறித்து பேசிய ரெஜினா எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடிப்பு ஏறுதல்.
இப்போது எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்து விட்டது. நான் SUP மெரினா கிளப் சிறந்த குழுவினர் ரோடு இணைந்து விட்டேன்.
12 வயது சிறுவன் அனிஷ் தான் இந்த பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முக்கிய காரணம்.
அவர் என்னை இந்த பணியில் பங்கேற்க ஊக்குவித்தார். கடற்கரை மற்றும் நீர் நிலைகளை மாற்றக்கூடாது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
சுற்று சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
நீர்நிலைகள் நமக்கு அத்தியாவசியமானது. அதனை கலங்கடிக்க வேண்டாம். இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன்.
அதனால் இந்த குழுவினரோடு இணைந்து விட்டேன். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.
View this post on Instagram
இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது
Actress @ReginaCassandra raises awareness for plastic-free oceans by teaming up with SUP Marina club for a stand-up paddle boarding activity ✨#ReginaCassandra@artistmanageIND @ProSrivenkatesh pic.twitter.com/3VkmzOuUsm
— Zplustamil (@zplustamil) May 4, 2024