புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல சகோதரி நடிகைகள்… யார் தெரியுமா?… இதோ பாருங்க…

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் பிரபல சகோதரி நடிகைகளான ராதா மற்றும் அம்பிகா இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை ராதா மற்றும் அம்பிகா இருவருமே 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள். நடிகை அம்பிகா தனது 14 வயதில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து 1979இல் வெளியான ‘சக்காளத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி’ தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை அம்பிகாவை தொடர்ந்து திரை உலகில் கால் பதித்தவர் அவரது சகோதரி நடிகை ராதா. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இவரும் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இருவரும் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் நடிகை அம்பிகா மட்டும் ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சகோதரி நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா இருவரும் புரட்சித்தலைவர் நடிகர் எம் ஜி ஆர் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது படுவைரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….