பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மகளை பார்த்திருக்கீங்களா?… அவரின் தற்போதைய நிலை இது தானா?… வைரலாகும் புகைப்படம் இதோ…

நடிகை சௌகார் ஜானகி தனது மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பழம்பெறும் நடிகையான சௌகார் ஜானகி தனது 18 வயதில் 1949 இல் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இவர் இன்றுவரை தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார். இவர் திரையுலகில் சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர் நடிகை சௌகார் ஜானகி.

   

1947 இல் ‘சவுக்கரு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சௌகார் ஜானகி என்னும் பெயரை பெற்றார். இதைத்தொடர்ந்து இவர் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்தார். கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற பல முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நாடக குழுக்களில் தீவிரமாக பங்கேற்ற சௌகார் ஜானகி நேரடி நாடக நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

சினிமா பைத்தியம் , தீ , தில்லு முல்லு , வெற்றி விழா , புது புது அர்த்தங்கள் “, காஞ்சே போன்ற தமிழ் படங்களில் அவரது நடிப்பு மற்றும் பெஸ்வாடா பெப்புலி, தாயாரம்மா பங்கராய, சம்சாரம் ஓகா சதுரங்கம் போன்ற தெலுங்கு மொழி படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

தோஸ்தி துஷ்மணி மற்றும் பிரேம் கீத் ஆகிய படங்களில் துணை வேடங்களில், இந்தி படங்களில் நடித்த அவர் தேசிய இந்திய திரைப்பட விருதுகள் குழுவில் இரண்டு முறை நடுவர் உறுப்பினராகவும் மாநில தெலுங்கு திரைப்பட விருதுகள் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

Sowcar Janaki @ Parthal Pasi Theerum Golden Jubilee Stills

பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரரான சௌகார் ஜானகியின் குடும்பத்தை பற்றி பார்க்கும் பொழுது ஸ்ரீநிவாஸ ராவ் என்பவரை திருமணம் செய்த இவருக்கு பிரபா என்ற மகள் இருக்கிறார். பிரபா நெருக்களில் இருக்கும் நாய்களுக்கு பாதுகாப்பாளராக அதாவது நாய்களுக்கு உணவு கொடுக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறாராம்.

இதோ  அவரது மகளின் புகைப்படம்….