மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே கே ரத்தினம் அவர்களின் தற்போதைய நிலை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர் ஜூடோ ரத்தினம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், ஹிந்தி என 1500 திரைப்படங்களுக்கும் மேலாக சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ராஜ்குமார், பிரேம், நசீர், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
இவர் 1959 இல் ‘தாமரைக் குளம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து 1967 இல் ‘வல்லவன் ஒருவன்’ என்ற படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக களமிறங்கினார் இவர் இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘தலைநகரம்’ படத்தில் நடித்திருந்தார்.
பொன்னம்பலம், விக்ரம் தர்மா, சூப்பர் சுப்புராயன் போன்ற பல பிரபலங்களை உருவாக்கியவர் ஜுடோ ரத்தினம். தற்பொழுது 92 வயதாகும் இவர் 3 மாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகின்றாராம்.
இவரை இதுவரை எந்த சினிமா துறையினரும் கண்டு கொள்வதில்லை, மேலும் பார்க்கவும் எந்தபிரபலமும் வருவதில்லை என்று கூறப்படுகிறது. இவரின் தற்போதைய நிலைமையை அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.