![lokesh (71)](https://awakeindiapac.com/wp-content/uploads/2023/08/lokesh-71-1.jpg)
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆன திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்தனர். மேலும் அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்து, தயாரிப்பாளருக்கு பல கோடி லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது. மேலும் இப்படம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளிலும் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி, புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது.
பேட்டி
இந்நிலையில் ரட்சகன், ஸ்டார், துள்ளல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி ஜெயிலர் படத்தை பற்றி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது கூறியதாவது, ‘ஜெயிலர் படம் ஏன் இவ்வளவு பெரிய ஹிட் ஆனது என்றால், படத்தின் க்ளைமேக்சில் ரஜினி ‘அப்பாக்கிட்ட ஏதாவது சொல்ல விரும்புரியா-மா’ என்ற டயலாக்கை 2,3 முறை பேசியிருப்பார்.
அதில் ஒரு வலி இருந்தது என்றும் அது வெறும் டயலாக் கிடையாது என்றும் கூறியுள்ளார். அப்போது இந்த டயலாக் பேசிய பின், ஜெயிலர் படத்தில் டாப் ஆங்கிளில் ரஜினி சிரிப்பதை காட்டுவார்கள். அந்த சிரிப்பு சினிமா கிடையாது மற்றும் அந்த சிரிப்புக்கு பின்னால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருக்கிறார். இவ்வாறு இயக்குனர் பிரவீன் காந்தி பேசியுள்ளார்.