காதல் படம் சந்தியா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்…

காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது சந்தியா தான்.

   

அந்த அளவிற்கு அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. சந்தியாவின் உண்மையான பெயர் ரேவதி. இவர் சினிமாவிற்காக சந்தியா என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

கேரள மாநிலம் கொச்சியை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவருக்கு ராகுல் என்ற ஒரு அண்ணனும் உள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான காதல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சந்தியா முதல் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

அதேசமயம் காதல் திரைப்படத்திற்காக தமிழ்நாடு மாநில விடுதையும் ஃபிலிம் பெயர் விருதையும் பெற்றுள்ளார்.

இன்று வரை இவரை அனைவரும் காதல் சந்தியா என்றுதான் அழைத்து வருகிறார்கள்.

பிறகு ஜீவா உடன் இணைந்து டிஷ்யூம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதோடு இவர் தமிழில் காதல், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, மகேஷ் சரண்யா, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும் சந்திரசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திவிட்டு முழு கவனத்தையும் சந்தியா குடும்பத்தில் செலுத்தி வருகிறார்.

அடிக்கடி அவர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும்.

இந்நிலையில் காதல் படம் சந்தியாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் பைரல் ஆகி வருகிறது.